Login

Lost your password?
Don't have an account? Sign Up

#Trending சீமான் மீது வழக்குப்பதிவு! அப்படி என்ன பேசினார் சீமான்?காமராசர் நினைவு 02-10-2018 கிண்டி

Contact Us To Add Your Business

வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு!

அப்படி என்ன பேசினார் சீமான்?

வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 02.10.2018 ம் தேதி காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்வரும், துணை முதல்வரும் தங்களை பிடல் காஸ்ட்ரோ என்றும், சேகுவேரா என்றும் அழைத்துக்கொள்கின்றனர் என்று செய்தியாளர்கள் கூறியதற்கு பதிலளித்த சீமான், இந்த மாதிரி செய்திகளை கேட்கக்கூடாது, இது போன்ற கொடுமைகள் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக தான் அவர்கள் முன்பே இறந்துவிட்டனர் என்றார்.

ராஜுவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, தமிழக அரசு சட்டசபையை கூட்டி தீர்மானம் போடாமல், அமைச்சரவையை கூட்டி தீர்மானம் போட்டிருக்கிறது தமிழக அரசு என்று குற்றம்சாட்டிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது என்றார்கள். ஆனால், நாங்கள் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே, அதற்கான நிதியும் ஒதுக்கவில்லையே என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால், நாங்கள் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்று தமிழக அரசு சொல்லிக்கொண்டிருக்கின்றது. அப்படி என்றால் அவர்கள் கொடுக்கும் அழுத்தம் என்பது என்ன? எஜமான் தூங்கும்போது கை, கால்களை பிடித்துவிடுவது தான் அவர்கள் கொடுக்குற அழுத்தம்; இது ஒரு வேடிக்கை விளையாட்டு இதைதான் நாம ரசிச்சிகிட்டு இருக்கோம் என்றார்.

இந்நிலையில், தமிழக அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையில் சீமான் பேசியதாக கோட்டூர்புரம் காவல்துறை ஆய்வாளர் அஜூ குமார் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச்சட்டம் 153, 505 (1)(b)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி

#Seeman #FidelCastro #CheGuevara #EdapadiKPalanisamy #OPS #Sabarimala #Sterlite #Hydrocarbon #TnPolitics #KamarajarMemorial #Guindy #NithiAyog #WaterCrisis #Copper #Rafael #France #IndianArmy #Ambani


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

https://www.tiruvarurdistrict.com

30 comments

  1. Daniel Abraham

    காமராசர் ஆட்சி போல ஆட்சி அமைக்க காமராசர் சமாதியிலிருந்து தொடங்குவோம்.

  2. TAMILLINUM VALLGHA VALLGHA

    மலேசியாவிலிருந்து இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர்.

  3. தமிழ் முகம்

    நாம் தமிழர் கட்சியை எதிர்க்கிறேன் என்று சொல்லி, நாம் தமிழர் கட்சியை வளர்த்து விடும் அற்பர்களுக்கு நன்றி?????

  4. Dinesh Kumar

    தயவுசெய்து கைது செய்து பாருங்கள் அப்புறம் தெரியும் தமிழன் யார் என்று?????????

  5. ஜேம்ஸ் James

    நாம் தமிழர் கட்சி
    Naam tamilar katchi?
    இந்த சேனலை நீங்கள் Subscirbe ? செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி ?
    எந்த ஊடகமும் நாம் தமிழர் கட்சியை பற்றி செய்திகளில் கடாது!
    நமக்கு நாமே தான் ஊடகம்
    நாம் தமிழர் ?? நாம் தமிழர்

  6. Sasi Kumar

    இந்த உறுதிமொழிதான் நம் பலம்….நாமதமிழர்…பலம் சகோ…உடம்பு புல்லரிக்குது…..செமடா அண்ணா…உன்பதில்
    ..என்ன பக்குவம்…

  7. getallshop.com

    உண்மையில் அண்ணனை செயலிழக்க செய்கிறார்கள்.
    தம்பிகளே தயாராகுங்கள் களமிறங்க நேரம் நெருங்கிவிட்டது.

  8. arivu arivu

    நாம் தமிழர்……எங்களை தவிர்த்து… “மற்றவர்களின் நிலைப்பாடு எல்லாம் இங்கு பொழுது” போக்கு தான்…. நாங்கள் இவ்வாறு கூறுவது தீமிர் அல்ல…. அவ்வளவு துன்பங்கள் வழிகளை உணர்த தேசிய இனத்தின் மக்கள்….. எங்கள் இன மொழி கலாச்சார பண்பாடு அதிகாரத்தை மீட்பதே இதற்கு ஒரே வழி… நாம் தமிழர்

    1. Aarudh raghaa

      எப்பயோ இரண்டு மூன்று வருடத்திற்கு முன்பு பேசியதற்கு இப்ப வழக்காம். பெண்களை இழிவாக பேசிய நல்லவர்களை கைது செய்ய முடியல. நீதிமன்றத்தை அவமதித்தவர்களை ஒண்ணும் செய்ய முடியல. டெல்லியில் பெண்கள் கல்லூரியில் புகுந்து தாக்கிய கும்பலை, போலிசை ஒண்ணும் செய்ய முடியல. கேடு கெட்ட அரசு மற்றும் ஊடகம்.

  9. தமிழ் முகம்

    உலகம் தழுவி நேசித்து நிற்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்??????

  10. முருகேசன் ஆறுமுகம்

    வாழ்க – தமிழ்,
    வாழ்க – விவசாயி,
    ஓங்குக – நம் தமிழ் தேசிய ஒற்றுமை,
    வளர்க – தமிழ் தேசியம்…
    பன்நெடுங்காலமாய் நம் மொழி, பண்பாடு, கலை, வாழ்வியல்
    இவற்றை இழந்து, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட ஒரு தேசிய
    இனத்தின் மக்கள். இழந்து விட்ட உரிமைகளை போராடித்தான் பெற வேண்டும்.
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை, நாம் தமிழர்.

Leave a Comment

Your email address will not be published.

*
*